Saturday, March 7, 2009

மனம் திறந்து பேசுங்கள்

உங்கள் மனதில் புழுங்கிக் கொண்டிருக்கும் ஒன்றை
வெளிப்படையாகவே பேசுங்கள்.அத்தகைய உணர்ச்சிகளை
மனத்திற்குள்ளேய்யே போட்டு பூட்டி வைக்காதீர்கள்.
அவ்வாறு நீங்கள் பூட்டி வைத்தால்,ஆபத்தான நிலையில
அது வேடித்து வெளிப்படக்கூடும்.இதனை பேசி தீர்ப்பது
அல்லது பேசி வெளிப்படுத்துவது என்கிறார்கள்.

விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது செயல்கள்
ஆகியவற்றை மனத்திற்குள்ளேயே அழுத்தி
வைக்கும் போது உணர்ச்சி இறுக்கம் ஏற்பட்டு ஆபத்தான
நிலையை அடைகிறது.இவ்வாறு அடைத்து வைப்பதற்கு
பதிலாக உணர்ச்சிகளை வெளியே கொட்டிவிட்டால்
மன இருக்கம் நீங்கிவிடுகிறது.

மனதிற்குள் புதைந்துள்ள விஷயங்களை வெளியேற்றி
விடுவது அவசியம்.நோயாளி அழுத்தி வைக்கப்பட்டுள்ள
விரும்பதகாத சிந்தனைகளை வெளிப்படுத்துவதே
ஒரு சிகிச்சை முறையாகும்.

உங்களுடைய உணர்ச்சி இறுக்கத்திற்கோ,மன
இறுக்கத்திற்கோ காரணம் இதுதான் என்று உங்களுக்கு
தெளிவாக தெரிந்திருக்குமேயானால் பேசுவதன் மூலம்
அதை நீங்கள் வெளியேற்றிக் கொண்டுவிட முடியும்.

உங்களை பற்றி நன்கு தெரிந்த உங்கள் நம்பிக்கைக்கு
பாத்திரமான நீங்கள் மனம் விட்டு பேசலாம்.சரியான
மனிதரை தேர்ந்தெடுத்து நீங்கள் பேச வேண்டும்.
அனைவரிடமும் மனதை திறந்து காட்டிப் பயனில்லை.

Friday, February 27, 2009

துரத்தும் பூதம்

தூங்கி கொண்டு இருந்தேன்.
ஒரு கனவு வந்தது.
அதிலும் தூங்கி கொண்டு இருந்தேன்
அதிலும் ஒரு கனவு வந்தது.
அந்த கனவில் ஒரு பூதம் துரத்தியது,
வியர்த்து துடிதுடித்து எழுந்தேன்,
என்றாளும் நான் துங்கிக்கொண்டு இருந்தேன்.
மீண்டும் ஒரு பூதம் வரலாம்.
நான் மீண்டும் எழலாம்.
ஆனாலும் பூதங்கள் துரத்துவது
தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Sunday, February 22, 2009

சில வரிகள்

1.ஒவ் இடமும் நம்மை எங்கோ அழைத்து செல்கின்றன.
2.வார்த்தைகளை குறைத்து கொண்ட மனது.
3.என் வழியில் எதிர் திசையில்.
4.உதடுகள் கோபபடட்டும்.
5.முறையற்று பறக்கும் பறவை.
6.தெளிவை வெறுக்கும்.
7.மனதுக்குள் புதைந்த பெயர்.
8.இதயத்திற்கும் மூலைக்கும் அப்பால்.
9.விரல் தங்கிய வாசம்.
10.பலுன் தெரியாத குழந்தைகள்.